பொங்கல் போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா பேரவையினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தமிழகத்தில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கும் பொங்கல் போனசாக ரூ.7,000 வழங்கவும், ஆண் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.



கோவை: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையின் சார்பில், தமிழ்நாட்டில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் தொழிலாளர்களுக்கும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7000 ரூபாயை போனசாக வழங்க வேண்டும்.

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 லட்சம் ரூபாயை பெறும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும். தொழிலாளர்களின் ஆண் குழந்தைகளுக்கும் 10,11,12 ம் வகுப்புகளுக்கான உதவித்தொகையை வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்த கோரிக்கை மனுவானது HMS பேரவையின் துணைத் தலைவரும், மாவட்ட கண்காணிப்பு குழுவின் உறுப்பினருமான மனோகரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

மனுவை அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உடனடியாக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...