தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வென்ற கோவையை சேர்ந்த தலைமை காவலருக்கு எஸ்.பி வாழ்த்து..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற தடகள போட்டியில், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



கோவை: கடந்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில், பங்கேற்ற கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தலைமை காவலர் கோவிந்தராஜை அவரது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.



காவல் துறையினரின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவலரை எஸ்பி நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளது மேலும் ஊக்கமளிப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...