உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 16 குழந்தைகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன..!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், தங்க நாணயம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதனையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி,நவம்பர் 27ஆம் தேதி திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில்பிறந்த16 குழந்தைகளுக்குதங்க நாணயம், ரூ.2000 மதிப்புள்ள ஆடைகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.



திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் நாகராஜ், மருத்துவமனை டீன் முருகேசன் ஆகியோர்கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க நாணயம் மற்றும் பரிசுகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராமதாஸ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜு, தம்பி குமாரசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...