உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 16 குழந்தைகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன..!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், தங்க நாணயம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதனையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி,நவம்பர் 27ஆம் தேதி திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில்பிறந்த16 குழந்தைகளுக்குதங்க நாணயம், ரூ.2000 மதிப்புள்ள ஆடைகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.



திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் நாகராஜ், மருத்துவமனை டீன் முருகேசன் ஆகியோர்கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க நாணயம் மற்றும் பரிசுகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராமதாஸ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜு, தம்பி குமாரசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...