கோவையில் உறவினர்களால் கைவிடப்பட்ட இறந்தவரின் உடலை மனிதாபிமான அடிப்படையில் அடக்கம் செய்த தலைமை காவலர்

கோவை அருகே உறவினர்களால் கைவிடபட்டு இறந்தவரின் உடலை தலைமை காவலர் ஒருவர் அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கணுவாய் பகுதியை சேர்ந்தவர் லத்தீப் கட்டிட வேலை செய்து வந்த இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரைஇரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் அவரும் திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றுவிடார். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு லத்தீப்பின் 2-வது மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

தனியாக இருந்த லத்தீப் குடிபழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பல பகுதிகளில் சுற்றி திறிந்த வந்த அவர், இறுதியாக பன்னிமடையில் உள்ள கோவில் வளாகம், பேருந்து நிறுதத்தம் ஆகிய இடங்களில் இரவு படுத்துக் கொள்வதும் பகல்நேரங்களில் கோவில்களில் கொடுக்கும் உணவுடன் பொது மக்களிடமும் உதவி கேட்டு சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு பன்னிமடை பேருந்து நிறுத்த நிழல் குடையில் படுத்திருந்த இவர்இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற தடாகம் போலீசார் லத்தீப்பின் உடலை கைபற்றிஅவரது மகளை தொடர்பு கொண்டுஇறந்த தகவலை சொல்லியுள்ளனர். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இறந்து போன லத்தீப்பின் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்ய வசதி இல்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது.



இறந்த பிறகும் கைவிடபட்ட நிலையில் இருந்த லத்தீப்பின் உடலை இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்ய தடாகம் தலைமை காவலர் கிருஷ்ணன் முடிவெடுத்தார். அதனடிப்படையில் லத்தீபின் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளார். அவரது இந்த மனிதாபிமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...