கோவையில் மறைந்த திமுக பிரமுகர் பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி

துடியலூரில் நடைபெற்ற மறைந்த திமுக பிரமுகர் பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: துடியலூர் பகுதி திமுக முன்னாள் அவைத்தலைவரும்,பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அவைத்தலைவரும்,செயலாளருமாக இருந்த மறைந்த பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

துடியலூர் திமுக மன்றத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் மற்றும் பகுதி கழக செயலாளர் அருள்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பங்காருசாமியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் 100க்கும் மேற்பட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட கழக துணை செயலாளரும் பங்காருசாமியின் பேரனுமான தமிழ் நிதி செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பழனியப்பன், வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...