குன்னூரில் தரமான பசுந்தேயிலை விற்பனை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் - வனத்துறை அமைச்சர் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில், தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்து விற்பனை செய்வது தொடர்பாக விவசாயிகள், விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலகத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை அதிகபடியான மக்கள் தேயிலை தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்து, விற்பனை செய்வது தொடர்பாக விவசாயிகள், விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார், மாவட்ட ஆட்சியர் அம்ரித், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர் மோனிகாராணா ஆகியோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:

தேயிலை தொழில் நலிவடைந்து வந்த காரணத்தினால் இது குறித்து கடந்த ஜூலை மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதிக இலாபத்தினை ஈட்டும் வகையில் பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டு, ஆலோசனைகளும் வழங்கட்டதாக கூறினார்.

அதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில் தேயிலைக்கு 12.82 ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் 14.38 ரூபாயும், செப்டம்பர் மாதத்தில் 15.82 ரூபாயும், அக்டோபர் மாதத்தில் 16.21 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிப்படியாக தேயிலைக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் ராமச்சந்திரன், விவசாயிகள் தரமான தேயிலைகளை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தரமான தேயிலை மூலமாக தரமான தேயிலை தூள் தயாரித்து விற்பனை செய்ய முடியும் என தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், இண்ட்கோ சர்வ் பொது மேலாளர் குமரகுருபன், துணை பொது மேலாளர்கள் சங்கர நாராயணன், தேயிலை விற்பனையாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...