கோவை வேளாண் பல்கலையில் தொழில் கூடங்களை பார்வையிட்ட மத்திய வேளாண் கூடுதல் செயலாளர்

கோவை வேளாண் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள தொழில் கூடங்களை பார்வையிட்ட மத்திய வேளாண்மை கூடுதல் செயலாளர் அபிலாஷ் லிக்கி, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் அறிவியலாளர்களிடம் கேட்டறிந்தார்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொழில் கூடங்களை மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கூடுதல் செயலாளர் அபிலாஷ் லிக்கி பார்வையிட்டார். அப்போது அங்குள்ள நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், அறிவியலாளர்களிடம் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து, வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தமிழக தேனீ வளர்ப்பாளர்களுடனான கலந்தாய்வுநடைபெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி மற்றும் பூச்சியியல் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அபிலாஷ் லக்கி,தேசிய தேனீ வாரியத்தின் இயக்குநர் பட்லே உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் தேனீ ஆர்வலர்கள் பங்கேற்று, தேனீ வளர்ப்பு குறித்த தங்களது அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், சந்தைப்படுத்துதல் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.



இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் தேன் சார்ந்த பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.டி.பி. தேனீப் பண்ணை சார்பில் வடிவமைக்கப்பட்ட நவீன தேன் எடுக்கும் இயந்திரத்தை மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் அபிலாஷ் லிக்கி, வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் தேனீ வளர்ப்பாளர்களுக்கும், தேனீ ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்தினர். நவீன தேன் எடுக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஏ.டி.பி தேனீ பண்ணையின் உரிமையாளர் தண்டாயுதபாணி விளக்கமளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...