கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை நண்பர்களுடன் கம்பால் அடித்தே கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டில், சித்திரைவேல் என்பவரை கள்ளக்காதல் தொடர்பான பிரச்சனையில், நண்பர்களுடன் இணைந்து ராஜன் என்பவர் கட்டையால் அடித்து கொன்ற வழக்கில் ராஜன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.


கோவை: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியில், அவருடைய அண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வெள்ளலூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரவேலின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு, கள்ள காதலன் ராஜனுடன் சென்று தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனால், சித்திரைவேல் வெள்ளலூருக்கு சென்று ராஜனை தட்டிக் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவருடைய மனைவி மனம் திருந்தி ராஜனை விட்டு பிரிந்து சித்திரவேலுடன் மீண்டும் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ராஜன் தனது கள்ளக் காதலுக்கு சித்திரைவேல் இடையூறாக இருப்பதாக கருதி, தனது கூட்டாளிகளுடன் சென்று கடந்த 17.5.2020 ஆம் ஆண்டு அன்று வீட்டில் இருந்த சித்திரைவேலை தடியால் அடித்து கொலை செய்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து. ராஜன் அவருடைய கூட்டாளிகள் அரவிந்த், குமார், செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது, கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராஜன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Newsletter

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவை எதிர்த்து கோவையில் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சி ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் தலைமையில் பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்படும்...