கோவையில் பரவும் 'மெட்ராஸ் ஐ பாதிப்பு' - எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!

மெட்ராஸ் ஐ பாதிப்பு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பதிவாகி வந்த நிலையில் தற்போது, கோவையில் பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்.


கோவை: மெட்ராஸ் ஐ எனப்படும் 'கான்ஜுன்க்டிவிடிஸ்' நோய் பாதிப்பு கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது, கோவையில் மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு அதிகளவில் பதிவாகி வருகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குஇந்த நோய் எளிதில் பரவுகிறது.

குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் சுமார் 20 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, காய்ச்சல் அறிகுறியுடன் சென்ற நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனால் பொதுமக்கள் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனமருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது, மெட்ராஸ் ஐ பொதுவாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு, வேகமாக பரவும். மேலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், அழுக்குகள் வெளியேற்றம் மற்றும் அதிக உறுத்தல் ஆகியவை ஏற்படும்.

இது ஒரு சிறிய கண் தொற்று என்றாலும், சரியான முறையில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். மாறாக மஞ்சள், சொட்டு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கண் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், கண் சொட்டு மருந்துகளைமட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவரின் உடைமைகளை பயன்படுத்துவதால், இந்நோய் மற்றொருவருக்கு எளிதில் பரவும்.

எனவே, நோயாளிகளை தனிமைப்படுத்துவது முக்கியம். நோயாளிகள் தங்கள் கண்களை அடிக்கடி கழுவினால் போதும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை, பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு, கண் கண்ணாடியை பயன்படுத்தலாம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...