சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் 51வது பிறந்த நாள் விழா - கோவையில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம்

கார்த்தி சிதம்பரத்தின் 51வது பிறந்தநாளையொட்டி கோவையில் உள்ள 51 கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக தகவல்.


கோவை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது 51வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி, கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 51 திருக்கோவில்களில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாராதாம்பாள் கோவிலில் கார்த்தி சிதம்பரம் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி கலந்து கொண்டார். மேலும் ஐ.என்.டி.யூ.சி. தொழிற் சங்க தலைவர் கோவை செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதாகவும், அன்னதானம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...