தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு: வியாபாரிகள் ஏலம் எடுக்க முன்வராததால் 7 டன் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

கிணத்துக்கடவு சந்தையில் 10 டன் தக்காளி ஏலத்திற்கு வந்த நிலையில், 3 டன் தக்காளியை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால், மீதமுள்ள தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில், கடும் மழையும் பொருட்படுத்தாமல் அறுவடை செய்த தக்காளியை, விவசாயிகள் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதற்காக இன்று கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் காய்கறி சந்தைக்கு வந்த 10 டன் நாட்டு தக்காளியில் மூன்று டன்கள் மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததாகவும், மீதம் இருந்த ஏழு டன் தக்காளியை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.



மேலும் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியை வியாபாரிகள் ஆறு ரூபாய்க்கு ஏலம் எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உரிய விலை கிடைக்காததால் விற்பனை செய்யக் கொண்டு வந்த தக்காளியை சந்தையில் உள்ள குப்பையில் கொட்டிச் சென்றனர்.

இதனால் காய்கறி சந்தையில் குப்பையில் தேங்கி கிடக்கும் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள தக்காளியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது..

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...