தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு: வியாபாரிகள் ஏலம் எடுக்க முன்வராததால் 7 டன் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

கிணத்துக்கடவு சந்தையில் 10 டன் தக்காளி ஏலத்திற்கு வந்த நிலையில், 3 டன் தக்காளியை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால், மீதமுள்ள தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில், கடும் மழையும் பொருட்படுத்தாமல் அறுவடை செய்த தக்காளியை, விவசாயிகள் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதற்காக இன்று கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் காய்கறி சந்தைக்கு வந்த 10 டன் நாட்டு தக்காளியில் மூன்று டன்கள் மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததாகவும், மீதம் இருந்த ஏழு டன் தக்காளியை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.



மேலும் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியை வியாபாரிகள் ஆறு ரூபாய்க்கு ஏலம் எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உரிய விலை கிடைக்காததால் விற்பனை செய்யக் கொண்டு வந்த தக்காளியை சந்தையில் உள்ள குப்பையில் கொட்டிச் சென்றனர்.

இதனால் காய்கறி சந்தையில் குப்பையில் தேங்கி கிடக்கும் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள தக்காளியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது..

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...