செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள்: கோவை கருமத்தம்பட்டியில் மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை - தமிழ்நாடு வாணிப கழகம்

சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம் (17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு.



கோவை: கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த செகுடந்தாளி பகுதியை சேர்ந்தவர் சாதி ஒழிப்பு போராளி முருகேசன். அவர் கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஆண்டுதோறும் நவம்பர் 17ஆம் தேதி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது நினைவு நாளையொட்டி அன்று ஒரு நாள் அப்பகுதியில் செயல்படும் மதுபான கடைகள் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம்(17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காரணமாக கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் 2261, 2270, 1975, 2306, 1821, 1736, 2272 மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு ஒரு நாள் (17.11.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது.

உத்தரவை மீறி செயல்படும் கடை, பணியாளர்கள் மற்றும் மதுக்கூட உரிமதாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...