டேன் டீ நிறுவனத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் - கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

டேன் டீ நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது எனக் கூறுவது தவறான காரணம் என்றும், நிர்வாக சீர்கேட்டை சரிசெய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும் எனவும் கூறினார்.



கோவை: டேன் டீ நிறுவனத்தை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, வரும், 17ஆம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற இருந்தது.

இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், மாநகர காவல் துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கப்படுகிறது என விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம்.

நாளை மறுதினம் அனுமதி மறுத்தால், வேறு தேதியில் அனுமதி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டால் உள்துறை செயலாளரை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் பேரணி அமைதியை நிலை நாட்டும் முயற்சி தான். கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டி கோவையில் அமைதியை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசு மாதம் ஒரு முறை மின் அளவீடும் முறையை அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் இது தொடர்பாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தொடர் போராட்டம் மேற்கொள்வோம்.

அதேபோல பீக் ஹவர்ஸ் சதவீதம் குறைப்பு ஒருபோதும் தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படாது இது ஒரு ஏமாற்று வேலை.

தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தரமானது. மார்க்கெட்டிலும் நல்ல விலை போகக் கூடியது. இந்த தேயிலை தோட்டங்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டங்களில் வால்பாறையில் 600 குடும்பங்களின் வேலைவாய்ப்பை பறிக்க, கூடலூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு தேயிலை கழகத்தை மூடுவது ஏற்புடையது அல்ல. இந்த முயற்சியை கைவிட வேண்டும். அது நட்டத்தில் இயங்குகிறது எனக்கூறுவது தவறான காரணம். நிர்வாக சீர்கேடு தான் காரணம், நிர்வாகத்தை சரி செய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும்.

மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு, 10% இட ஒதுக்கீடு குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...