கோவை சுந்தராபுரம் அருகே அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை - நள்ளிரவில் மர்ம நபர் கைவரிசை

சுந்தராபுரம் அருகே அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் புண்ணியகோடி. இவருக்குசாரதா மில் சாலையில் செல்போன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள்கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில்,கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுமார் 12 மணியளவில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த செல்போன்களை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.



இதையடுத்து கடை உரிமையாளர் புண்ணியகோடி, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளுடன் போத்தனூர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

இதனிடையே புண்ணியக்கோடி கடை மட்டுமின்றி அடுத்தடுத்து 2 செல்போன் கடைகள் பூட்டையும் உடைத்து மர்ம திருடிச் சென்றதும் தெரியவந்தது.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...