தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திருப்பி கிடைக்காததால் விரக்தி - கோவையில் தாய்,மகள் தற்கொலை செய்த சோகம்

சூலூரில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திரும்பி கிடைக்காத விரக்தியில் தாய்,மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: சூலூர் அருகே உள்ள அம்மாள் கோவில் பிள்ளையார் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் காந்தரூபன்.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அவர் தான் ஏற்கனவே வசித்த பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு நடத்திய சீட்டில் கிடைக்க பெற்ற பணத்தை காந்தரூபனின் மனைவி பழனியம்மாள் வட்டிக்கு விட்டதாக கூறப்படுகிறது. அந்த பணம் தீபாவளி சமயத்தில் திரும்ப கிடைக்காத காரணத்தினால் சீட்டு போட்ட அனைவரும் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

இதனால் மனவேதனையில் மூவரும் இருந்ததாக கூறப்படுகிறது.பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுக் நச்சரித்து வந்ததால், விரக்தி அடைந்த காந்தரூபன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



இதில் மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழக்க, காந்தரூபன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...