கோவை வடவள்ளி அருகே மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு - பெண் உட்பட இருவர் கைது

வடவள்ளி சின்னமா நகரில் கோவிலுக்கு நடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்துச் சென்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி இடையர்பாளையம் சாலை, சின்னமா நகரை சேர்ந்தவர் மாலதி (62). இவர் கடந்த 4 ஆம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக ஹோண்டா டியோ வாகனத்தில் ஒரு பெண்ணும் ஆணும் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மாலதியின் அருகில் சென்ற அவர்கள் மாலதி அணிந்திருந்த 4 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக மூதாட்டி மாலதி, வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் இருந்த 20 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி (45), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...