கோவை வடவள்ளி அருகே மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு - பெண் உட்பட இருவர் கைது

வடவள்ளி சின்னமா நகரில் கோவிலுக்கு நடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்துச் சென்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி இடையர்பாளையம் சாலை, சின்னமா நகரை சேர்ந்தவர் மாலதி (62). இவர் கடந்த 4 ஆம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக ஹோண்டா டியோ வாகனத்தில் ஒரு பெண்ணும் ஆணும் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மாலதியின் அருகில் சென்ற அவர்கள் மாலதி அணிந்திருந்த 4 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக மூதாட்டி மாலதி, வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் இருந்த 20 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி (45), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...