கோவையில் கனமழை - மழைநீர் வடிகால், கால்வாய் தூய்மை பணியால் தரைப்பாலங்களில் நீர் தேங்குவது தவிர்ப்பு

கோவையில் இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் மாநகராட்சியின் தூய்மை பணி காரணமாக லங்கா கார்னர் உள்ளிட்ட முக்கிய தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது. He ruled.


கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு முழுவதும் தொடர் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோவை மாநகரில் முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யும் போது கோவை லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலம் மற்றும் கிக்கானிக் தரைப்பாலம் முழுமையாக நீர் தேங்கி அந்த சாலைகளில் போக்குவரத்து முடங்கும் சூழல் ஏற்படும். பின்னர் ராட்சத மோட்டர்கள் மூலம் நீண்ட நேரம் நீர் வெளியேற்றப்பட்டு சாலைகள் மீண்டும் திறந்து விடப்படும்.



ஆனால் அந்த கால்வாய்கள், மழை நீர் வடிகால் தூய்மை செய்யப்பட்ட நிலையில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் இந்த தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.



இதனால் எந்த பாதிப்பும் இன்றி அந்த சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...