கோவையில் கனமழை - மழைநீர் வடிகால், கால்வாய் தூய்மை பணியால் தரைப்பாலங்களில் நீர் தேங்குவது தவிர்ப்பு

கோவையில் இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் மாநகராட்சியின் தூய்மை பணி காரணமாக லங்கா கார்னர் உள்ளிட்ட முக்கிய தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது. He ruled.


கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு முழுவதும் தொடர் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோவை மாநகரில் முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யும் போது கோவை லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலம் மற்றும் கிக்கானிக் தரைப்பாலம் முழுமையாக நீர் தேங்கி அந்த சாலைகளில் போக்குவரத்து முடங்கும் சூழல் ஏற்படும். பின்னர் ராட்சத மோட்டர்கள் மூலம் நீண்ட நேரம் நீர் வெளியேற்றப்பட்டு சாலைகள் மீண்டும் திறந்து விடப்படும்.



ஆனால் அந்த கால்வாய்கள், மழை நீர் வடிகால் தூய்மை செய்யப்பட்ட நிலையில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் இந்த தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.



இதனால் எந்த பாதிப்பும் இன்றி அந்த சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...