கோவையில் மழைநீர் தேக்கம், அவிநாசி மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு..!

தொடர் மழை காரணமாக அவிநாசி மேம்பால கீழ்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வரும் நிலையில், அப்பணிகளை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: இன்று காலை முதல், கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.



குறிப்பாக, அவிநாசி மேம்பால கீழ் பகுதியில் அதிகமான மழை நீர் தேங்குவது வழக்கமாக ஒன்றாக உள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் பம்ப் மூலம் மழைநீரை அகற்றி வருகின்றனர்.



நீர் வெளியேற்றப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...