கோவையில் மழைநீர் தேக்கம், அவிநாசி மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு..!

தொடர் மழை காரணமாக அவிநாசி மேம்பால கீழ்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வரும் நிலையில், அப்பணிகளை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: இன்று காலை முதல், கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.



குறிப்பாக, அவிநாசி மேம்பால கீழ் பகுதியில் அதிகமான மழை நீர் தேங்குவது வழக்கமாக ஒன்றாக உள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் பம்ப் மூலம் மழைநீரை அகற்றி வருகின்றனர்.



நீர் வெளியேற்றப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...