கோவையில் மழைநீர் தேக்கம், அவிநாசி மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு..!

தொடர் மழை காரணமாக அவிநாசி மேம்பால கீழ்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வரும் நிலையில், அப்பணிகளை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: இன்று காலை முதல், கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.



குறிப்பாக, அவிநாசி மேம்பால கீழ் பகுதியில் அதிகமான மழை நீர் தேங்குவது வழக்கமாக ஒன்றாக உள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் பம்ப் மூலம் மழைநீரை அகற்றி வருகின்றனர்.



நீர் வெளியேற்றப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...