கோவையில் நவ 17 நடைபெற உள்ள அமைதி பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள டாக்டர் கிருஷ்ணசாமி அழைப்பு

கோவை மக்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்கக்கூடிய வகையில் வரும் 17 ஆம் தேதி, காலை 11 மணி அளவில் கோட்டைமேடு கோட்டை ஈஸ்வரன் கோவிலிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமைதி பேரணி நடைபெறும்.


கோவை: சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கோவை மீண்டும் அமைதி பூங்காவாக மாற வேண்டும் என்ற நோக்கில் "Rally of Peace for Coimbatore"என்ற அமைதி பேரணியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.

வரும் நவம்பர் 17ஆம் தேதி பேரணி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், மக்கள் அனைவரும் திரளாக பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில், "கோவை மாநகரம் - மாவட்டம் தொன்றுதொட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உகந்த தட்பவெப்ப சூழலில் அமைந்துள்ள மிக முக்கியமான தொழில் நகரமாகும். மும்பைக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் ’மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படக்கூடிய அளவிற்கு நூற்பாலைகளும், பிற தொழில் நிறுவனங்களும்; தற்பொழுது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெருகி வரும் நகரமாக விளங்குகிறது.

1998 இல் நடந்த தொடர் வெடிகுண்டு நிகழ்வுகள் பெரும் உயிரிழப்புக்களையும், பொருளாதார சேதங்களையும் உருவாக்கியது. அதனால், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்தது.

கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோவை, கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் வெடி விபத்தும், அதைத் தொடர்ந்து அதில் சம்பந்தப்பட்டவர்களுடைய இல்லங்களில் நடைபெற்ற சோதனைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதும் மிகக் கவலை அளிக்கக் கூடியது ஆகும்.

கோவைக்கு நேர்ந்திருக்கக் கூடிய மிகப்பெரும் ஆபத்து அதிர்ஷ்டவசமாக அன்று தடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் திட்டப்படி ஏதாவது நிகழ்ந்திருக்குமே ஆனால், கோவையை மட்டும் அல்ல, தமிழகம் - இந்தியாவின் ஒட்டுமொத்த அமைதியையும் சீர்குலைத்து இருக்கக்கூடும். இது போன்ற தீவிரவாதிகளின் கேந்திரமாக கோவையைத் தொடர்ந்து அனுமதிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது ஆகாது.

எனவே, கோவையில் நிரந்தரமாக பயங்கரவாத செயல்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல எண்ணங்களும், ஒற்றுமை உணர்வும், ஒருமைப்பாடும் வளர்க்கப்பட வேண்டும். சட்டம் ஒரு பக்கம் தனது கடமையைச் செய்தாலும், மக்கள் மத்தியில் நிலவும் நல்ல உணர்வுகளே நிரந்தரமான அமைதியை உருவாக்கும்.

எனவே, கோவை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்கக்கூடிய வகையில் அனைத்து தொழில் - வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள் உட்பட அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் வரும் வருகின்ற 17.11.2022 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் கோட்டைமேடு கோட்டை ஈஸ்வரன் கோவிலிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ’RALLY OF PEACE FOR COIMBATORE’ எனும் தலைப்பில் கோவையில் ’அமைதிப் பேரணி’ நடைபெற உள்ளது.

எனவே, அதில் தமிழக – கோவை மக்கள் அனைவரும் இந்த அமைதி பேரணியில் பெரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்", என அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...