டேன் டீ நிர்வாகத்தை மூடுவதை கைவிட வலியுறுத்தி வால்பாறையில் வரும் 13ஆம் தேதி உண்ணாவிரதம் - கோவையில் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ அறிவிப்பு

கோவை வால்பாறை சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, டேன் டீ நிர்வாகத்தை மூடுவதை தமிழக அரசு கைவிடக்கோரி வரும் 13ம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், மருத்துவ பணியாளர்கள் என யாரும் இல்லாமல் நோயாளிகள் சிரமப்பட்டனர்.



இதை தொடர்ந்து இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, வட்டார மருத்துவ அலுவலர் பாபு லட்சுமணன் கூறியதாவது, இங்கு ஏற்கனவே வேலை செய்தவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்றார்.



இதனை தொடர்ந்து பேசிய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, மருத்துவ பணியாளர் பற்றாக்குறை பிரச்சனையை உடனடியாக தமிழக அரசிடம் தெரிவித்து மருத்துவர்களை பணிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டேன் டீ நிர்வாகத்தை மூடும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவதால், டேன் டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதன் காரணமாக, டேன் டீ நிர்வாகத்தை மூடுவதை கைவிட வலியுறுத்தி வரும் 13ஆம் தேதி வால்பாறையில் டேன் டீ தொழிலாளர்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...