கோவையில் பழங்கால கோவில்களுக்கு அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் பழங்கால கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடத்தின் அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதற்கட்ட பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டு கால பழமைவாய்ந்த ஈஸ்வரன் திருக்கோவில், 1350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் திருக்கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இவற்றிற்கு அருகில் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.இந்த சூழலில் ஈஸ்வரன் திருக்கோவில் மற்றும் தனியார் பள்ளி இடையே புதிதாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்க ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில் இன்று அங்கு ஜேசிபி வாகனம் மூலம் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டன.



இதையறிந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அதிகாரிகளையும் ஜேசிபி வாகனத்தையும் முற்றுகையிட்டு சுடுக்காட்டிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்த செட்டிபாளையம் காவல்நிலைய போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



மேலும், இது தொடர்பாக உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு எட்டப்பட்ட பிறகே மின் மயானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக பேசிய பொதுமக்கள், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில்கள் மற்றும் பள்ளி ஆகியவை அடுத்தடுத்து இருந்தும் அதன் அருகே மின் மயானம் அமைப்பது என்பது கண்டிக்கத்தக்கது. மின் மயானம் அமையும் பட்சத்தில் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

ஏற்கனவே கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் செல்லும் பேருந்துகள் ஒத்தக்கால் மண்டபம் பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தில் ஏறி செல்வதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில், மின் மயானம் நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமையும் பட்சத்தில் போக்குவரத்து பாதிக்கப்படும்.

தற்போது மின்மயானம் அமைய உள்ள இடத்தை விடுத்து வேறு பகுதியில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலேயே மின் மயானம் அமைக்கும் பட்சத்தில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...