கோவையில் பழங்கால கோவில்களுக்கு அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் பழங்கால கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடத்தின் அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதற்கட்ட பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டு கால பழமைவாய்ந்த ஈஸ்வரன் திருக்கோவில், 1350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் திருக்கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இவற்றிற்கு அருகில் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.இந்த சூழலில் ஈஸ்வரன் திருக்கோவில் மற்றும் தனியார் பள்ளி இடையே புதிதாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்க ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில் இன்று அங்கு ஜேசிபி வாகனம் மூலம் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டன.



இதையறிந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அதிகாரிகளையும் ஜேசிபி வாகனத்தையும் முற்றுகையிட்டு சுடுக்காட்டிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்த செட்டிபாளையம் காவல்நிலைய போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



மேலும், இது தொடர்பாக உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு எட்டப்பட்ட பிறகே மின் மயானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக பேசிய பொதுமக்கள், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில்கள் மற்றும் பள்ளி ஆகியவை அடுத்தடுத்து இருந்தும் அதன் அருகே மின் மயானம் அமைப்பது என்பது கண்டிக்கத்தக்கது. மின் மயானம் அமையும் பட்சத்தில் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

ஏற்கனவே கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் செல்லும் பேருந்துகள் ஒத்தக்கால் மண்டபம் பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தில் ஏறி செல்வதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில், மின் மயானம் நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமையும் பட்சத்தில் போக்குவரத்து பாதிக்கப்படும்.

தற்போது மின்மயானம் அமைய உள்ள இடத்தை விடுத்து வேறு பகுதியில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலேயே மின் மயானம் அமைக்கும் பட்சத்தில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். 

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...