கோவை கே.ஜி.சாவடியில் உள்ள மருந்தகங்களில் மருந்தக ஆய்வாளர் மற்றும் போலீஸார் அதிரடி சோதனை

கோவையில் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்க கூடாது. கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் கொண்டு வரும் ரசீதையும் பரீசிலனை செய்ய வேண்டும். லாப நோக்கத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வாளர்கள் மருந்தகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

சமீபகாலமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரை பயன்பாடு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈச்சனாரி அருகே போதை ஊசி எடுத்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளரின் மகன் உயிரிழந்தார். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மருந்தகங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவை கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள மருந்தகங்களில் மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம், மருத்தக ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் கே.ஜி.சாவடி உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குறிப்பாக போதைக்காக இளைஞர்கள் வாங்கக்கூடிய மாத்திரைகளின் மொத்த இருப்பு விற்பனைகளை ஆய்வு செய்தனர்.



இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள மருத்தக உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.



அப்போது மருத்துவர் ஆலோசனை மற்றும் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்க வேண்டாம், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் கொண்டு வரும் ரசீதையும் நன்கு பரீசிலனை செய்து சில வகை மருந்துகளை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.



லாப நோக்கத்தில் போதைக்காக வாங்கும் மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...