வால்பாறை அருகே நியாய விலைக்கடையை உடைத்து சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை நடுமலை எஸ்டேட் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், தாழம்பூ நியாய விலை கடையின் ஜன்னல் கதவை உடைத்து, அரிசி மூட்டைகளை தின்று அட்டகாசம்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அடுத்த நடுமலை எஸ்டேட் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆறு காட்டு யானைகள் நேற்று இரவு நடுமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளன.



இதனையடுத்து அங்குள்ள தாழம்பூ நியாய விலை கடையின் ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



மேலும் கடைக்குள் இருந்த இரண்டு மூட்டை அரிசியை தின்றுள்ளன. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதை வனத்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு யானைகள் நியாய விலைக்கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...