குன்னூர் அவாஹில்லில் நடைபெற்ற மாணவ, மாணவியர்களுக்கான மலையேற்றத்தில் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா பங்கேற்றார்

குன்னூர் அவாஹில் மலையேற்ற முகாமில் பங்கேற்ற விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி சிறப்பித்தார்.



குன்னூர்: அகில இந்திய என்சிசி மாணவ மாணவியரின் மலையேற்ற முகாம் குன்னூர் அவாஹில்லில் நடைபெற்றது.



இதில் விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியக் குடிமகனும், அசோக சக்ரா விருது பெற்றவருமான, விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா கலந்துகொண்டார். அவரை முகாம் கமாண்டன்ட் கர்னல் ஸ்ரீனிவாஸ் வரவேற்றார்.



முகாமில் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடிய ராகேஷ் ஷர்மா மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை என்றார்.

நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கனவுகளைத் துரத்துவது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.



எந்த தடங்கல்களிலும் ஊக்கமளிக்கும் ஆன்மாவை நிறுத்தாது என்றும், உந்துதல் உள்ளிருந்து வெளிபட வேண்டும் என்றும் ராகேஷ் ஷர்மா மாணவ, மாணவியர்களிடம் ஊக்குவிக்கும் படி பேசினார்.

மேலும் தொழில்நுட்ப உலகில் இந்திய அறிவின் தேவை மிக முக்கியமானது என்றார். மேலும் தேசத்திற்கான கடமையைச் செய்வதன் மூலம் மரியாதையை சம்பாதிக்க முடியும் என கூறினார்.



இந்நிகழ்வில் தலைமை விருந்தினருக்கு கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவராவ் நினைவுப் பரிசு வழங்கி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...