சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலகங்களுக்கு கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவில், சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 17 பேருக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பாராட்டினார்.


கோவை: சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா இன்று கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 17 பேருக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், கொரோனா பேரிடர் காலத்தில் பிற நாடுகளை விட நம் நாட்டின் பொது சுகாதாரத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதற்கு ஓய்வின்றி பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் அனைவரும் முக்கிய காரணம்.

மேலும், ஒரு மருத்துவராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக, தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் தொடர்பாக குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...