திடக்கழிவுகளை முறையாக பிரித்து மாநகராட்சியால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌ - கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்

பெருங்கழிவுகளை உருவாக்கும் வணிக வளாகங்கள்‌, அரசாங்க அலுவலகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌ உள்ளிட்டவை திடக்கழிவுகளை முறையாக பிரித்து மாநகராட்சியால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க ஆணையர் பிரதாப் உத்தரவு.



கோவை: கோவையில் அதிகளவிலான கழிவுகளை உருவாக்கும் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை திடக்கழிவுகளை முறையாக பிரித்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை‌ மாநகராட்சியில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை‌ மாநகராட்சியில்‌ ஒரு நாளைக்கு குறைந்தது 850 டன்‌ முதல்‌ 1100 டன்‌ வரையிலான திடக்கழிவுகள்‌ சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல்‌ திடக்கழிவு உருவாக்கும்‌ அடுக்குமாடி குடியிருப்புகள்‌, வீட்டுச் சமூகம்‌, வணிக வளாகங்கள்‌, அரசாங்க அலுவலகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌, காய்கறி சந்தைகள்‌, அங்காடிகள்‌, கல்வி நிறுவனங்கள்‌, மருத்துவமனைகள்‌, வழிபாட்ட்டுத் தலங்கள்‌, விளையாட்டு அரங்கம்‌, உணவகங்கள்‌ ஆகியவை மொத்த கழிவு உற்பத்தியாளர்கள்‌ என குறிப்பிடப்படுகிறது.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்‌ 2016, கோவை‌ மாநகராட்சி சட்டம்‌ 1981 (தமிழ்நாடு சட்டம்‌ 25/1981)432 பிரிவின்‌ கீழ்‌ உபவிதிகள்‌ 10ன்‌ படி பெருமளவு கழிவுகள்‌ உருவாக்குபவர்களே கழிவுகளை மேலாண்மை செய்ய வேண்டும்‌.

மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகள்‌ 2016 விதிகள் ‌4, உபவிதிகள்‌(6)(7) மற்றும்‌ (89ல்‌ பெருங்கழிவு உருவாக்குபவர்கள்‌ திடக்கழிவுகளை முறையாக பிரித்து உள்ளாட்சி துறையினரால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

மேலும்‌ கோவைமாநகராட்சியின்‌ அங்கீகாரம்‌ பெற்ற (Empaneled Agencies) பற்றிய விவரங்களை www.ccmc.gov.in என்ற மாநகராட்சியின்‌ இணையதளத்தின்‌ வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...