திடக்கழிவுகளை முறையாக பிரித்து மாநகராட்சியால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌ - கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்

பெருங்கழிவுகளை உருவாக்கும் வணிக வளாகங்கள்‌, அரசாங்க அலுவலகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌ உள்ளிட்டவை திடக்கழிவுகளை முறையாக பிரித்து மாநகராட்சியால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க ஆணையர் பிரதாப் உத்தரவு.



கோவை: கோவையில் அதிகளவிலான கழிவுகளை உருவாக்கும் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை திடக்கழிவுகளை முறையாக பிரித்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை‌ மாநகராட்சியில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை‌ மாநகராட்சியில்‌ ஒரு நாளைக்கு குறைந்தது 850 டன்‌ முதல்‌ 1100 டன்‌ வரையிலான திடக்கழிவுகள்‌ சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல்‌ திடக்கழிவு உருவாக்கும்‌ அடுக்குமாடி குடியிருப்புகள்‌, வீட்டுச் சமூகம்‌, வணிக வளாகங்கள்‌, அரசாங்க அலுவலகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌, காய்கறி சந்தைகள்‌, அங்காடிகள்‌, கல்வி நிறுவனங்கள்‌, மருத்துவமனைகள்‌, வழிபாட்ட்டுத் தலங்கள்‌, விளையாட்டு அரங்கம்‌, உணவகங்கள்‌ ஆகியவை மொத்த கழிவு உற்பத்தியாளர்கள்‌ என குறிப்பிடப்படுகிறது.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்‌ 2016, கோவை‌ மாநகராட்சி சட்டம்‌ 1981 (தமிழ்நாடு சட்டம்‌ 25/1981)432 பிரிவின்‌ கீழ்‌ உபவிதிகள்‌ 10ன்‌ படி பெருமளவு கழிவுகள்‌ உருவாக்குபவர்களே கழிவுகளை மேலாண்மை செய்ய வேண்டும்‌.

மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகள்‌ 2016 விதிகள் ‌4, உபவிதிகள்‌(6)(7) மற்றும்‌ (89ல்‌ பெருங்கழிவு உருவாக்குபவர்கள்‌ திடக்கழிவுகளை முறையாக பிரித்து உள்ளாட்சி துறையினரால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

மேலும்‌ கோவைமாநகராட்சியின்‌ அங்கீகாரம்‌ பெற்ற (Empaneled Agencies) பற்றிய விவரங்களை www.ccmc.gov.in என்ற மாநகராட்சியின்‌ இணையதளத்தின்‌ வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...