கோவை விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம பெட்டி - பாதுகாப்பு படை விரர்கள் சோதனை: பரபரப்பு..!

கோவை விமான நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த நிலையில், சந்தேகமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை மேற்கொண்ட பின் அதனை எடுத்துச் சென்றனர்.



கோவை: வெளிநாடு, உள்ளூர் என பயணிப்பதற்காக தினமும் ஏராளமான மக்கள் கோவை விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் வந்து செல்வதால், கோவை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அதே விமானத்தில் பாமக தலைவர் அன்புமணி வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



இதனிடையே விமான நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதனால் சந்தேமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பெட்டியை சோதனை செய்தனர்.



இதையடுத்து கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியை பாதுகாப்பு படை வீரர்கள் எடுத்துச் சென்றனர்.

நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...