கோவை விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம பெட்டி - பாதுகாப்பு படை விரர்கள் சோதனை: பரபரப்பு..!

கோவை விமான நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த நிலையில், சந்தேகமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை மேற்கொண்ட பின் அதனை எடுத்துச் சென்றனர்.



கோவை: வெளிநாடு, உள்ளூர் என பயணிப்பதற்காக தினமும் ஏராளமான மக்கள் கோவை விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் வந்து செல்வதால், கோவை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அதே விமானத்தில் பாமக தலைவர் அன்புமணி வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



இதனிடையே விமான நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதனால் சந்தேமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பெட்டியை சோதனை செய்தனர்.



இதையடுத்து கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியை பாதுகாப்பு படை வீரர்கள் எடுத்துச் சென்றனர்.

நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...