கோவை விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம பெட்டி - பாதுகாப்பு படை விரர்கள் சோதனை: பரபரப்பு..!

கோவை விமான நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த நிலையில், சந்தேகமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை மேற்கொண்ட பின் அதனை எடுத்துச் சென்றனர்.



கோவை: வெளிநாடு, உள்ளூர் என பயணிப்பதற்காக தினமும் ஏராளமான மக்கள் கோவை விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் வந்து செல்வதால், கோவை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அதே விமானத்தில் பாமக தலைவர் அன்புமணி வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



இதனிடையே விமான நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதனால் சந்தேமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பெட்டியை சோதனை செய்தனர்.



இதையடுத்து கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியை பாதுகாப்பு படை வீரர்கள் எடுத்துச் சென்றனர்.

நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...