தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை.

தீபாவளி முடிந்து மறுநாள் புறப்படும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், தீபாவளிக்கு மறுநாளான அக்.25ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிக்ககோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் இந்தாண்டு அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.

இக்கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து வெளியூருக்கும் வெளியூரிலிருந்து சென்னைக்கும் பல தரப்பு மக்கள் பயணம் செய்ய உள்ளனர்.

கூட்ட நெரிசல் இன்றி எளிமையாகவும் இனிமையாகவும் பயணம் செய்ய பல்வேறு சிறப்பு பேருந்துகளை தங்களின் வழிகாட்டுதல்படி போக்குவரத்துத்துறை அறிவித்தமைக்கு நன்றி.

இந்த வேளையில் கொண்டாட்டம் முடித்து மீண்டும் அவரவர் இருப்பிடங்களுக்கு ஒரு சேர அனைவரும் திரும்பும் பொழுது மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தீபாவளி தினத்திற்கு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பின்னொரு நாளில் ஈடுசெய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது விடுமுறையாக அறிவித்து உதவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...