கேஎம்சிஎச் மருத்துவமனையின் சார்பில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு


உலகம் முழுவதும் பிப்ரவரி 4ம் தேதியன்று யூனியன் ஆப் இன்டர்நேசனல் கேன்சர் கன்ரோல் என்ற அமைப்பினால் உலக புற்றுநோய் தினம் அனசரிக்கப்படுகிறது.

இதைமுன்னிட்டு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் கையெழுத்து இயக்கம் இன்று நடத்தப்பட்டது. மேலும், இதன் ஒரு பகுதியாக உடல் பரிசோதனைக்கான புதிய திட்டம் ரூபாய் 999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கையெழுத்து இயக்கத்தை கேஎம்சிஎச் இயக்குநர் டாக்டர் அருன் பழனிசாமியுடன் இணைந்து கோவை நகர போக்குவரத்து இணை ஆணையர் எஸ்.சரவணன் இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

இதய நோய்களுக்குப் பிறகு புற்றுநோயே மனிதர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உலக அளவில் புற்றுநோயால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 18 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோயால் பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அடுத்து வரும் 5 முதல் 10 வருடங்களில் இரட்டிப்பாகும் என கருதப்படுகிறது.

புற்றுறோயை கண்டறிவது, அதற்கு சிகிச்சை அளிப்பது ஆகிய துறைகள் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டது. தற்போதைய காலகட்டத்தில் 50 சதவிகித புற்றுநோயாளிகள் குணமடைகிறார்கள். இது 1970-களில் 25 சதவிகிதமாக இருந்தது.

புற்றுநோயை குணப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அனைத்துவிதமான புற்றுநோய்களும் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் குணமடைய வாய்ப்புள்ளது.

புற்றுநோயின் சிகிச்சையானது அறுவை சிகிச்சை, ரேடியோ தெரபி, கீமோ தெரபி உள்ளிட்ட மூன்றுவிதமாக சிகிச்சைகளை உள்ளடக்கியது. இவ்வனைத்துவிதமான சிகிச்சைகளும் இன்று மிகவும் முன்னேறியுள்ளது. இதனால், புற்றுநோயை மிகவும் துள்ளியமாகவும், பாதுகாப்பான முறையிலும் குணமாக்க முடியும்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...