கோவையில் நடந்த காவலர் பயிற்சி நிறைவு விழா கூடுதல் காவல் துறை இயக்குநர் பங்கேற்பு…!

பயிற்சி காவலர்களின் நிறைவு அணி வகுப்பு விழா, கோவைப்புதூர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி நான்காம் அணி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் கலந்துக் கொண்டார்.


கோவை: தமிழ்நாடு சிறப்பு இரண்டாம் நிலை காவலர் 235 பேர் பயிற்சி காவலர்களின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட, கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



தொடர்ந்து, காவலர்கள் முன்னிலையில் பேசிய காவல் துறை இயக்குனர் (காவல்துறை நவீன மயமாக்கல்) சஞ்சய் குமார் கூறும் போது:



இன்று பயிற்சி முடிந்து செல்கிறீர்கள் அதோடு பொறுப்பும் அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே ஸ்கார்லாந்து போலீஸுக்கு இணையான போலீஸ், தமிழக போலீஸ் என கூறினர். அவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

இளங்கன்று பயமறியாது என்ற வார்த்தைக்கிணங்க தைரியமாக செயல்படுங்கள். குடியரசு தலைவரின் சிறந்த காவல் துறைக்கான விருதை தமிழக காவல்துறை பெற்று பெருமை சேர்ந்துள்ளோம். தற்போதைய பயிற்சி முடித்துள்ள உங்களில் 72 பேர் பொறியாளராக இருக்கலாம், 27 பேர் திருமணம் முடித்திருப்பீர்கள், ஏனைய 205 பேர் சில ஆண்டுகளில் திருமணம் முடிக்க இருக்கிறீர்கள். எனவே குடும்பத்தின் மீது உங்களுக்கு பொருப்பு வேண்டும்.

அதே போல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் பணி குறித்து அறிந்து உங்களது பொறுப்பை அவர்களும் தெரிந்திருக்க வேண்டும்.



போலிஸ் பணி மிக பெருமையான பணி.



இதில், எளிதில் பாராட்டுகள் கிடைக்காது, ஆனால், பணிக்கான மரியாதை உங்களுக்கே தெரியும், என்று விழாவில் பேசினார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...