தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் வெடித்தது மாணவர் போராட்டம்



தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போரட்டங்களில் இறங்கினர். தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாணவர்களின் இந்த அறப்போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திம் பாரம்பரிய விளையாட்டான கம்பளா-வுக்கு இருக்கும் தடையை நீக்க வலியுறுத்தி அம்மாநில மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  எருதுகள் பந்தையமான கம்பளா விளையாட்டில் எருதுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா முறையீடு செய்த வழக்கில் அவ்விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.

தங்கள் பாரம்பரிய விளையாட்டுக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கர்நாடக மாணவர்கள் மற்றும் மக்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.மேலும், கன்னட பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா-வின் அரசு கம்பலா விளையாட்டுக்கு ஆதரவாக இருக்கிறது. இருந்த் போதும், உச்ச நீதிமன்றம் தடை வித்துள்ளதால் விளையாட்டை நடத்தமுடியாத சூழல் உருவாகியிருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் தமிழகம் போல கர்நாடகத்திலும் அவசரச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...