வால்பாறையை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் யானைகள் அட்டகாசம்

வால்பாறையை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவில் 5 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. 



இதில் அங்கு உம்மர் என்பவர் நடத்தி வந்த டீக்கடையை உடைத்த யானைகள் கடையில் இருந்த மாவுப் பொருட்கள், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் சேதப்படுத்தியது. கடையின் கட்டிடமும் சேதமடைந்தது. 

இதே போல் அருகில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளி அன்புச் செழியன் என்பவரது வீட்டின் ஓடுகளையும் காட்டு யானைகள் உடைத்தது. அதுமட்டுமல்லாமல் நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தையும் உடைத்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் அச்சத்தில் ஆழ்ந்தனர். 

தொடர்ந்து பல எஸ்டேட் பகுதிகளிலும் யானைகள் இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. 

எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து யானைகள் முகாமிட்டுள்ள பகுதியை கண்டறிந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினால் பொருட்சேதம் மட்டுமல்லாமல் உயிர்ச்சேதத்தையும் தவிர்க்கலாம் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...