அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்வி நிறுவனம் சார்பில் குடியரசு தின விழா கடைபிடிப்பு



அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் சார்பில் நேற்று அக்கல்வி நிறுவன வளாகத்தில் குடியரசு தினவிழா கடைபிடிக்கப்பட்டது.

விழாவின் தொடக்கமாக வேதியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.எஸ்.மோனிகா தேசிய மாணவர் படையின் பல்வேறு நிகழ்வுகள் குறித்து அறிக்கையினை வாசித்தார்.

இதைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.



தொடர்ந்து, வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் உறுதிமொழி வாசிக்க பல்கலைக் கழகம் மற்றும் பள்ளி மாணவியர்களும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.



ஸ்ரீ அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் தேசபக்தி பாடலுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி நடனத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...