துணிநூல் துறையில் நெசவாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு


கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம் இலுப்பநத்தம் ஊராட்சி, சிறுமுகை பகுதிகளில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நெசவாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த செய்தியாளர்கள் பயணம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. 

இப்பயணத்தின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கு சேமிப்பினை ஊக்குவிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும், ஏற்படுத்தப்பட்ட சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நெசவாளர்களின் நலன் கருதி மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. 

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.43.09 லட்சம் மதிப்பில் 8 சதவிகிதம் அரசு மானியமும் ரூ.63.58 லட்சம் மதிப்பில் 6.5 சதவிகிதம் வட்டி மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000-மும், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ.1000  வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 583 நெசவாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 

நெசவாளர் நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நெசவாளர்களின் உடல்நலம் காக்கும் வகையில் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்துடன் இணைந்த நெசவாளர் குடும்பத்தினர் 4 நபர்களுக்கு மருத்துவ நிதயுதவியாக வருடத்திற்கு ரூ.15,000 வழங்கப்படுகின்றது. 

இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 11012 நபர்களுக்கு ரூ.31.29 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நெசவாளர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 5 நபர்களுக்கு கொண்ட குழுமத்திற்கு ரூ.37 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 9712 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நலவாழ்வு அறக்கட்டளை மூலமாக கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளின் பள்ளி இறுதி படிப்பிற்கு பின்னர் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற படிப்பு படிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது.



மேலும், நெசவாளர்கள் தங்கள் இல்லங்களிலேயே தறிகளை வைத்து தொழில் செய்ய ஏதுவாக ஒவ்வொரு வீடும் 365 சதுரஅடியில் ரூ.2.60 லட்சம் மதிப்பில் கட்டப்படும். ஒவ்வொரு வீட்டில் 213 சதுர அடியில் தறிக்கூடத்துடன் கூடிய வாளும் அறை, 88 சதுர அடியில் படுக்கை அறை மற்றம் 64 சதுர அடியில் சமையல் அறை அமைக்கப்படும். 

வீட்டின் வெளித்தோற்றத்தில் மாற்றம் இல்லாமல் சமையலறை அல்லது படுக்கை அறையினை வசதிக்கேற்ப தேவைப்படும் இடத்தில் அமைத்துக் கொள்ளும் வகையில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை, கோவை மாவட்டத்தில் நெசவாளர்களுக்கு ரூ.12.87 கோடி மதிப்பீட்டில் 575 பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. 

மேலும், நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தகுதியுள்ள பயனாளிகள் பயன்பெற்று பொருளாதாரத்தினை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...