ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் மற்றும் நியூயார்க்கின் கண்காடியா கல்விக் குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் துவக்கம்


கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தைச் சார்ந்த ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் கண்காடியா கல்லூரியிடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.



ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி மற்றும் கண்காடியா கல்லூரியின் நிர்வாகத் துணைத் தலைவர் முனைவர் ஜேம்ஸ் கிரிஸ்டியன் பர்க்கி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை பயிலும் மாணவர்கள் முதல் இரண்டு வருடங்களை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று மீதமுள்ள ஒரு வருடத்தினை அமெரிக்காவில் உள்ள கண்காடியா கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று பயில்வார்கள்.

முழுமையான வருடங்களை முடித்த பின்னர் இம்மாணவர்கள் மேலும் ஒரு வருடம் அமெரிக்காவில் இதே கல்லூரியில் முதுகலை மேலாண்மை பட்டத்தினை பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு புதுமையான முறையில் கல்விகள் வழங்கப்பட உள்ளது.



இந்நிகழ்ச்சியில், இக்கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கி.சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானகுமார், துறைத் தலைவர்கள் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...