கோவையில் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பில்லூர், ஆழியாரில் இருந்து தண்ணீர் பெறப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர் வரத்து முழுமையாக நின்று விட்ட காரணத்தால், குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக பில்லூர்-1 திட்டத்தின் மூலம் கூடுதலாக குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு கூடுதலாக ஆழியார் குடிநீர் 20 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

"கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோவை மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 51 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சிறுவாணி குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தினால் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு குறிச்சி பகுதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பில்லூர் குடிநீர், நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டருடன் கூடுதலாக நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஆழியார் நீராதாரத்திலிருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரிலிருந்து நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் குனியமுத்தூர் பகுதிக்கு வழங்க இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குறிச்சி மற்றும் மாச்சம்பாளையம் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு குறைவுபடாது. எதிர்காலத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படும்.

எனவே, குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து பொதுமக்களும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...