பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் நடிகர் சூர்யா கருத்து


கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள கற்பகம் திரையரங்க வளாகத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 3 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நடைபெற்றது. இயக்குநர் ஹரி நடிகர் சூர்யா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் முன்னிலையில் முன்னோட்ட காட்சியை வெளியிட்டனர்.



அப்போது பேசிய நடிகர் சூர்யா, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்றும் பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை போல் விவசாயிகளின் பிரச்சனைக்கும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் இளைஞர்கள் போராட்டத்தை வரவேற்பதாகவும் கூறிய அவர், தண்ணீர் பிரச்சனைக்கும் குரல் கொடுக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் எனவும் சூர்யா கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...