ஹோண்டா டூவீலர்கள் சார்பில் கோவையில் போக்குவரத்துப் பூங்கா துவக்கம்


தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தினை கொண்டாடும் விதமாகவும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் தினசரி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான பழக்கத்திற்கான தனது பொறுப்பினை அளிக்கும் வகையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்  அதன் 11-வது போக்குவரத்து பூங்காவை இந்தியாவில் முதன்முறையாக கோவையில் துவங்கியது.



மேலும், ஹோண்டா தனது தனிச்சிறப்பான "டிரீம் ரைடிங்" முயற்சியையும் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் துவங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பெண்ணும் வாகனம் ஓட்டுபவராக ஆக இம்மையத்தில் பயிற்சியளிக்கப்பட உள்ளது.

இதன் துவக்கவிழாவில் தீபக் எம் டாமோர், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், தலைமையக துணை ஆணையர் மூர்த்தி, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன், கோவை மாநகர காவல் துறை யத்வீந்தர் சிங் குலரியா, ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் விற்பனை மற்றம் சந்தைப்படுத்துதல் மூத்த  துணைத் தலைவர் டோமாகி நாக்யாம், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் தேற்கு பிராந்திய துணை இயக்குநர் யோகேஷ் மதுர், மண்டல விற்பனை தலைவர் ஆஷிஷ் சௌத்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இவ்விழாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் மூத்த தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா பேசியதாவது:-

முதலில் வருபவர்கள் தத்துவத்தின் கீழ் 1970 முதல் சாலை பாதுகாப்பினை மேம்படுத்துவது ஹோண்டாவின் முதன்மை முன்னுரிமையாக இருக்கிறது. இந்தியாவிலும் எங்களது அனைத்து தொழில் நடவடிக்கைகளிலும் பாதுகாப்பினை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஹோண்டா ஏற்கனவே பின்பற்றி வருகிறது.

பல்வேறு சாலை பாதுகாப்பு முயற்சிகள் மூலமாக, ஹோண்டா 2 வீலர் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பியுள்ளது. எங்களின் சாலை பாதுகாப்பு முயற்சிகளை இங்கே விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பினை ஹோண்டா 2 வீலர் இந்தியாவுக்கு வழங்கிய கோவை மாநகர காவல் துறைக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...