' தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும்' மாநிலச் செயலாளர் முத்தரசன் உறுதி.


வறட்சி பாதுகாப்புகள் குறித்து ஆய்வு அறிக்கையை தமிழக அரசு விரைவாக தாக்கல் செய்து பேரிடர் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 கோவை சின்னியம்பாளையம் தியாகிகளின் 71 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இடதுசாரிகள் சார்பில் அவர்களது நினைவு இடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்பாடு பொதுமக்களுக்கும், முகவர்களுக்கும் தான் இழப்பு என்பதால், பெட்ரோல் முகவர்கள் அறிவிப்பு சரியானது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த பல மாதங்களாக வறட்சி நிலவியதால் நம்பிக்கைக்குரிய பதில் அரசிடம் இருந்து வராததால் தான் விவசாயிகள் உயிரிழந்ததாக கூறிய அவர், விவசாயிகள் நோய்வாய், வயோதிகம் காரணமாக இறந்ததாக சில அமைச்சர்கள் கூறுவது கண்டனத்துக்குரியது என்றார்.

 விவசாயிகளை கொச்சைப்படுத்தும் செயல் என்றார். தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும், தினமும் 400ரூபாய் கூலி, கடந்தாண்டு காப்பீட்டுத் தொகையையும், தனியாரிடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியவர் பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்தும் வர்தா புயலுக்கு முதற்கட்டமாக கேட்கப்பட்ட 1000 கோடி ரூபாயில் ஒரு பைசா கூட இதுவரை தராமல் தமிழக அரசுக்கு எப்போதும் உதவ தயார் என்று மத்திய அரசு கூறுவதை சுட்டிக்காட்டி சாடினார்.

 நீதிமன்றத்தை காரணம் காட்டி தமிழக பாஜக, பொன். ராதாகிருஷ்ணன் தவறான தகவலை கொடுத்து வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும் என்று உறுதியளித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...