எல்லன் மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை ஆணையரிடம் இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு

கோவை காந்திபுரம் எல்லன் மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி காவல் துறை ஆணையர் அமல்ராஜிடம் இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள எல்லன் மருத்துவமனையில் புதனன்று சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட பிரதீப்குமார் என்ற வாலிபர் திடீரென உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளைஞர் உயிரிழந்தார் எனக் கூறி அவரது உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்ததுடன், மருத்துவர் ராமசந்திரனையும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க கோவை கிளை நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், மருத்துவமனை தரப்பில் தவறுகள் நடந்து இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதும், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தவறானது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் 2008-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதனிடையே, இறந்த பிரதீப்குமாரின் உடல் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...