எல்லன் மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை ஆணையரிடம் இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு

கோவை காந்திபுரம் எல்லன் மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி காவல் துறை ஆணையர் அமல்ராஜிடம் இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள எல்லன் மருத்துவமனையில் புதனன்று சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட பிரதீப்குமார் என்ற வாலிபர் திடீரென உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளைஞர் உயிரிழந்தார் எனக் கூறி அவரது உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்ததுடன், மருத்துவர் ராமசந்திரனையும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க கோவை கிளை நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், மருத்துவமனை தரப்பில் தவறுகள் நடந்து இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதும், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தவறானது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் 2008-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதனிடையே, இறந்த பிரதீப்குமாரின் உடல் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...