சம ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இதில், நிரந்தர ஊழியர்களை விட கூடுதலாக தாங்கள் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போல தங்களுக்கும் வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் என்ற விகிதத்தில் மாதம் 6000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும்  சென்னை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய அதிக அளவில் ஒப்பந்த தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டதாகவும் குறைந்த கூலியில் வேலை செய்யும் பணியாளர்கள் கவுரவமாக  நடத்தப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். 

மேலும், தொழிலாளர் சட்டவிதி 25 (5)அ -வின் படி நிரந்தர பணியாளர் செய்யும் அதே வேலையை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை மாநில அரசும் மாநகராட்சி நிர்வாகமும் அமல்படுத்த மறுத்து வருகிறது.

தொழிலாளர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆஜராகாமல் உள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் மாநகர ஆணையர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...