வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் கோவையில் மோசடி


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனம் இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி விட்டதாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர் லட்சுமியிடம் தேனியைச் சேர்ந்த ராஜா என்பவர் மனு அளித்துள்ளார். 

அம்மனுவில், கோவை மாவட்டம் சௌவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனத்தினர் ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தேனி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். 

இதற்காக 60 லட்சம் ரூபாய் வரை என்னைப் போன்று சுமார் 34-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இருந்து முன்தொகையாக பெற்று அதற்கு ரசீதும், சில ஆவனங்களையும் வழங்கினர். அவ்வாறு பணம் செலுத்தியவர்கள் மூன்று மாதத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவர் என அறிவித்தனர்.

இவ்வாறு பணம் செலுத்தி பல மாதம் கடந்தும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதுவிசயமாக விசாரிக்க வந்த போது மேற்குறிப்பிட்ட நிறுவனம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர்களது அலைபேசியும் துண்டித்து வைத்துள்ளனர். 

இதனால், எங்களுக்கு அந்நிறுவனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு எங்களது பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...