“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன், பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளதாக வீடியோ பதிவு மூலம் குறிப்பிட்டுள்ளார்.


Coimbatore: தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்திய ‘எனது பூத், வலிமையான பூத்’ (Mera Booth, Sabse Mazboot Samvaad) கலந்துரையாடல் நிகழ்வு, தனக்குப் புதிய உத்வேகத்தையும் மனவலிமையையும் கொடுத்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தச் சூழலிலும், பிரதமரின் ஊக்கமளிக்கும் பேச்சு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஆழமாக விதைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து வரும் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், “உங்களின் பிரார்த்தனைகளுக்கும் ஆசிகளுக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...