உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன், பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளதாக வீடியோ பதிவு மூலம் குறிப்பிட்டுள்ளார்.
Coimbatore: தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்திய ‘எனது பூத், வலிமையான பூத்’ (Mera Booth, Sabse Mazboot Samvaad) கலந்துரையாடல் நிகழ்வு, தனக்குப் புதிய உத்வேகத்தையும் மனவலிமையையும் கொடுத்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தச் சூழலிலும், பிரதமரின் ஊக்கமளிக்கும் பேச்சு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஆழமாக விதைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து வரும் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், “உங்களின் பிரார்த்தனைகளுக்கும் ஆசிகளுக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தச் சூழலிலும், பிரதமரின் ஊக்கமளிக்கும் பேச்சு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஆழமாக விதைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து வரும் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், “உங்களின் பிரார்த்தனைகளுக்கும் ஆசிகளுக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.