பீட்டா அமைப்பு 34 ஆயிரம் உயிரினங்களை கொன்றுள்ளதாக அமெரிக்கர்கள் குற்றச்சாட்டு


ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடையை பெற்றுத்தந்த அமைப்பு 'பீட்டா'. 

1989-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. அதனால், இந்த அமைப்புக்கு வரும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பீட்டா அமைப்பு தொடங்கியது முதல் இதுவரை சுமார் 34 ஆயிரம் விலங்குகளை அந்த அமைபினர் கொன்று குவித்ததாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

பீட்டா விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்குள் கொண்டுவரப்படும் விலங்குகளில் 97 சதவிகிதம் கொல்லப்படுவதாக அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நுகர்வோர் சுதந்திர மையம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு, 'பீட்டா விலங்குகளை கொல்கிறது' (petakillsanimals.com) என்ற பெயரில் இணையதளம் ஒன்றை துவங்கி அதற்கு ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்கள். மேலும், அந்த நாடு முழுவதும் பீட்டா அமைப்புக்கு எதிரான விளம்பரப்பலகைகள் வைத்து, பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 

நாளொன்றுக்கு சராசரியாக 6 விலங்குகள் பீட்டா அமைப்பினரால் கொல்லப்படுவதாக கூறும் நுகர்வோர் சுதந்திர மையம், பீட்டவிற்குள் கொண்டுவரப்படும் நாய் மற்றும் பூனைகள் அடுத்த 24 மணி நேரத்தில் கொல்லப்படுகிறது என்ற வெர்ஜீனியாவின் கால் நடைத்துறையின் 2010ம் ஆண்டு ஆய்வை சுட்டிக்காட்டியுள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...