பீட்டா அமைப்பு 34 ஆயிரம் உயிரினங்களை கொன்றுள்ளதாக அமெரிக்கர்கள் குற்றச்சாட்டு


ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடையை பெற்றுத்தந்த அமைப்பு 'பீட்டா'. 

1989-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. அதனால், இந்த அமைப்புக்கு வரும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பீட்டா அமைப்பு தொடங்கியது முதல் இதுவரை சுமார் 34 ஆயிரம் விலங்குகளை அந்த அமைபினர் கொன்று குவித்ததாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

பீட்டா விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்குள் கொண்டுவரப்படும் விலங்குகளில் 97 சதவிகிதம் கொல்லப்படுவதாக அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நுகர்வோர் சுதந்திர மையம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு, 'பீட்டா விலங்குகளை கொல்கிறது' (petakillsanimals.com) என்ற பெயரில் இணையதளம் ஒன்றை துவங்கி அதற்கு ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்கள். மேலும், அந்த நாடு முழுவதும் பீட்டா அமைப்புக்கு எதிரான விளம்பரப்பலகைகள் வைத்து, பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 

நாளொன்றுக்கு சராசரியாக 6 விலங்குகள் பீட்டா அமைப்பினரால் கொல்லப்படுவதாக கூறும் நுகர்வோர் சுதந்திர மையம், பீட்டவிற்குள் கொண்டுவரப்படும் நாய் மற்றும் பூனைகள் அடுத்த 24 மணி நேரத்தில் கொல்லப்படுகிறது என்ற வெர்ஜீனியாவின் கால் நடைத்துறையின் 2010ம் ஆண்டு ஆய்வை சுட்டிக்காட்டியுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...