தீராத பணப்பிரச்சனையைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தூக்கு கயிறு அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது


50 நாட்களுக்கு மேலாகியும் ரூபாய் தாள்கள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கோவையில் பிரதமர் மோடிக்கு தூக்கு கயிறு அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.



உயர் மதிப்பு ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், பொதுமக்கள் பழைய ரூபாய் தாள்களை மாற்றவும், புதிய ரூபாய் தாள்களை பெறவும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே பணப்பிரச்சனைக்கு 50 நாட்களில் தீர்வு ஏற்படாவிட்டால் என்னை தூக்கில் போடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பணம் மதிப்பிழப்பு வெளியிட்டு 50 நாட்கள் கடந்த நிலையில் பணப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தூக்கு கயிற்றுடன் திரண்ட அவ்வமைப்பினர், பிரதமர் மோடிக்கு தூக்கு கயிற்றை அனுப்ப முயன்றனர். 90 சதவிகித ஏடிஎம்-கள் மூடப்பட்டு இருப்பதாகவும், திறந்திருக்கும் ஏடிஎம்களிலும் பணம் கிடைப்பதில்லை எனவும், வங்கிகளிலும் போதியளவு பணம் கிடைக்காமல் நாடு முழுவதும் பொதுமக்கள் தவித்து வருவதாகவும், ஆனால் மக்களை பற்றி கவலையில்லாமல் மத்திய அரசு தினந்தினம் புதியபுதிய அறிவிப்புகள் மூலம் மக்களை குழப்பி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் எடுக்க காத்திருந்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டு இருப்பதால் தொழில் முனைவோரும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறிய அவர்கள், 50 நாட்களுக்குள் பண நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை எனில் தூக்கில் தொங்குவேன் என அறிவித்திருந்த பிரதமர் மோடிக்கு நினைவூட்டும் வகையில் தூக்கு கயிற்றை அனுப்புவதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து, தூக்கு கயிற்றை அனுப்ப முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பிரதமருக்கு தூக்கு கயிற்றை அனுப்ப முயன்ற சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...