வேளாண் பல்கலையில் வளங்குன்றா வேளாண்மையில் நுண்ணுயிர்கள் குறித்து கலந்துரையாடல்

சர்வதேச பயறு வகை பயிர்களுக்கான ஆண்டின் (2016) முக்கிய சிறப்பு நிகழ்ச்சியாக, “வளங்குன்ற வேளாண்மையில் நுண்ணுயிர்கள் - உழவர்கள் சிறப்பு கலந்துரையாடல்” தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் நுண்ணுயிரியல் துறையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கலிருந்தும், 75 உழவர் பெருமக்களும், தமிழக அரசின் வேளாண் துறையில் நுண்ணுயிர் உர உற்பத்தி ஆய்வகத்தில் பணியாற்றும் வேளாண் அலுவர்களும் பங்கேற்றனர்.  



இவ்விழாவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராமசாமி தலைமையேற்று துவைக்கி வைத்தார். தனது துவக்க உறையில்; பயிறுகளின் முக்கியத்துவம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் தொழில் நுட்பங்கள், வேளாண் விரிவாக்க செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். மேலும் உழவர்களும் மாணவர்களும் இப்பல்கலைகழகத்தின் இருகண்கள் என உழவர்களை முன்னிருத்தி தனது துவக்க உரையாற்றினார். 



பிலிப் விரிவாக்கக் கல்வி இயக்குனர் வாழ்த்துரை வழங்கினார். நவீன உயிர் உர உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் உபயோகிக்கும் முறைகள் பற்றியும் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் பயிறுவகை பயிர்களுக்கான செறிவூட்டப்பட்ட ரைசோபிய உயிர் உரம் அறிமுகம் படுத்தப்பட்டு, விதை நேர்த்தி, அதை செய்யும் முறை பற்றியும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நவீன உயிர் உரஉற்பத்தி ஆய்வகத்தை நேரில் கண்டு பார்வையிட்டனர்.  இவ்விழாவில் நவீன உயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் வெளியிடப்பட்டது.

இயற்கை வள மேம்பாட்டு இயக்குனரக தனி அலுவலர் குமார் வரவேற்றார். வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் மாரிமுத்து நன்றியுரை வழங்கினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...