கோவையில் தொல் திருமாவளவன் நிரூபர்களிடம் சந்திப்பு!


தமிழக தலைமை செயலாளரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அது குறித்து கருத்து கூற முடியாது எனவும் இது குறித்து தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். வருமான வரித்துறை ஆய்வு மூலம் மத்திய அரசு மாநில அரசின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறதா என்பதை இரு அரசுகளும் விளக்க வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தினார்.

மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்தியுள்ளதாகவும் அக்கட்சிக்கு இன்னும் 4 ஆண்டு ஆட்சிக்காலம் இருப்பதால் முதலமைச்சரையும் கட்சிக்கான பொதுச்செயலாளரையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அக்கட்சிக்கு உள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...